பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

165



2. மனைவியிடம் நல்ல மாட்சிமை - மாண்பு இல்லையெனில், அவளிருக்கும் குடும்பத்தின் வாழ்க்கை சிறப்புடையதாகாது.

3. ஒருவர்க்கு ஒருவர் குளிர்ந்த அன்பின்றிக் கொள்ளும் தொடர்பு, உறவும் ஆகாது - நட்பும் ஆகாது.

4. பிறர்க்கு ஒன்றும் உதவாத கையையுடைய கருமி புகழாகிய மலைக்கு - மலையத்தனைப் புகழுக்கு உரியவன் ஆகான்.

5. ஒன்று கலந்து பொருந்தாத உள்ளம் உடையவன் உயர்ந்த நண்பனாகக் கருதப்படான்.

6. ஆசிரியர்க்கு ஒருதவியும் செய்யாமல் வஞ்சித்துக் கற்கும் கல்வி உண்மையான கல்வியாகாது.

7. தான் வளத்துடன் வாழாவிடினும், பிறர் அவ்வாறு வாழமுடியாமையைக் கண்டு வருந்தும் வருத்தம் உண்மை யான வருத்தமாகாது.

8. அறவழியில் ஈட்டிய பொருளை நன்முறையில் - நல்லதற்குக் கொடாத கொடை உண்மைக் கொடையாகாது.

9. உரிய முறையில் நோற்காத நோன்பு (தவம்) உண்மை நோன்பு ஆகாது.

10. மறுபிறப்பு என்பதை முன்கூட்டி அறிந்து அதற்கு ஏற்றபடி ஒழுகாமல், ஆண்டில் மட்டும் மூத்த மூப்பு, உண்மையான பயனுள்ள மூப்பாகாது.

6. இல்லை - இல்லை எனக் கூறும் பத்து மொழிகள்

1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்கு எல்லாம், பிள்ளைப்பேற்றை விட வேறு பெரிய பேறு இல்லை.

2. உலக நடைமுறை அறிந்து ஒருவர்க்கு ஒருவர் உதவி வாழ்வதைக் காட்டிலும் தக்க செயல்-தக்க வரவு இல்லை.