பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101

101

நிமிஷம் நெனச்சுப் புட்டேன். மாரியாத்தா என்னைக் காப்பாத்தலியா!??

== நெனச்சுப் பார்க்கவே வெக்கமா இருக்குடா ராமா??

‘'நீ ஒண்ணையும் நெனைச்சுப் பார்க்க வேணாம். இன்னும் கொஞ்ச நேரத்திலே எஜமான் வண்டியிலே உன் பிள்ளையும், பூவாயியும் வந்துடு வாங்க?? - -

சிவந்தா! பூவாயி என்னைக் கொன்னுப் புடுவா. பெத்த அப்பன் காரன், ராப்பூரா ஆஸ்பத்திரிப் பக்கம் வந்து எட்டிக்கூடப் பார்க்கல் லேன்னு பேசப்போறா...எதற்கும் நான் ஆஸ் பத்திரிக்குப் போய் பார்த்துட்டுவற்றேன் ராமா? என்று ஆறுமுகம் புறப்பட்ட போது ராமன் தடுத்து நிறுத்தினான்.

- "அண்ணே...நான் தான் பொன்னி போயிருக் குன்னு சொன்னேன் இல்லே; இப்போ நீ வேறே போயி என்ன பண்ணப் போறே! எதுக்கும் அவ வரட்டும், ரெண்டு பேருமா போய்ப் பார்ப்போம்: என்று ராமன் கூறிக் கொண்டிருக்கும் போதே கையில் ஒரு பையுடன், தர்மா பிளாஸ்க்குட னும் பொன்னி வீட்டினுள் நுழைந்தாள்.