பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28

குதிச்சு வந்துடுமா! சரிதானேடா ராமா நான் சொல்லறது?’ என்று ஆறுமுகத்திற்கு உரைக் கிறார் போல பலவேசம் பிள்ளை கேட்கவும், **ஆமாங்க எஜமான். எங்க குடும்பத்திலே நடக் கிறது உங்களுக்குத் தெரியாதது என்னங்க இருக்கு எஜமான்?’’ என்று ராமன் ஒத்துப் பாடி னான்.

சேரி...சரி. மத்தவங்களையும் கூட்டுக் கொண்டு கணக்கப் பிள்ளையோடெ சாவடிக்குப் போய் இருங்க. இன்னிக்கு மத்தியானத்துக் குள்ளே எல்லா நெல்லையும் அளந்து, மூட்டை கட்டியாகணும். இந்தா சாவி. நானும் பின்னா லேயே வந்துடறேன்’ என்று ஆறுமுகத்திடம் சாவியை பலவேசம் பிள்ளை கொடுத்தார்.

அவர்கள் புறப்பட்டுப் போனதும், பலவேசம் பிள்ளை பூவாயியிடம், சில திட்டங்களை கூறினார். அதன்படி கிராமத்துப் பெண்களை எல்லாம். ஒன்று கூட்டி; எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டு வந்து தன்னிடம் கூறுமாறு சொல்லி அனுப்பினார்.

பூவாயியும் மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென் றாள்.