பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31

அதைக் கேட்ட அவர்கள், நீ, எங்கே கூப் பிட்டாலும், அங்கே வர்றோம். எப்படியாவது நீ தான் இதுக்கு ஒரு வழி பண்ணனும்’ என்று ஏகமனதாக ஒப்புக் கொண்டு விட்டனர்.

மறுநாள்

பலவேசம் பிள்ளை குறிப்பிட்டபடியே அத் தனை குப்பத்துப் பெண்களும் தவறாமல், மாந் தோப்பில் ஆஜராகி இருந்தனர்.

பலவேசம் பிள்ளையைக் கண்டதும், சில பெண்கள் ஓடிச்சென்று அவர் கால்களில் விழுந்து, 'எஜமான்... நீங்கதான் இதுக்கு ஒருவழி பண்ணி, எங்க வயித்திலே பாலை ஊத்தனும்”, என்று கதறி அழுதனர்.

பலவேசம் பிள்ளை அவர்களைச் சமாதானப் படுத்தினார்.

'இப்படி அழுததினாலே எந்தக் காரியமும் நடக்காது; இந்த மாதிரியான சமயங்களிலே, நீங்க ரொம்பு தைரியமாகச் செயல்படனும், அதை விட முக்கியமா, எல்லோரும் ஒற்றுமையாச் செயல் படனும்’’.

'நீங்க எது சொன்னாலும் கேக்கறோமுங்க. புருஷன் திருந்தினாப் போதும். நீங்க என்