32
32
னமோ, கை நிறையத்தான் சம்பளம் கொடுக்க lங்க. ஆனா, அது அத்தினியும் கள்ளுக்கடைக்குத் தான் போகுது. அதுவும் போதாதுன் னு, எங்க கூலியையும் பிடிங்கிக்கறாங்க.’’ என்றனர் கூட் டத்திலிருந்த பெண்கள்.
உடனே பலவேசம் பிள்ளை, அவங்க கேட்டா, நீங்க ஏன் கொடுக்கறிங்க??? என்று கேட்டார்.
அதற்கு ஒரு பெண், குடுக்காட்டி, அடியும் உதையும் யாருங்க படறது’’ என்று திருப்பிக் கேட்டாள்.
அதன்பிறகு, தைரியம் அடைந்தவர்கள் போல், ஒவ்வொரு பெண்களும் தங்கள் குறை களை முறையிடத் துவங்கினர்.
'வீட்டுலே ஒரு காசு முடிஞ்சு வைக்க முடியல் லிங்க. சட்டி, முட்டி, எங்கே ஒளிச்சு வெச்சிருந் தாலும், தேடிப்பிடிச்சு எடுத்துடறாங்க"
'அப்படித் தேடியும் கிடைக்கல்லேன்னா, கண்ணுமண்ணு தெரியாமெ போட்டு அடிக்கறாங்க எஜமான்.’’
நேத்திக்கு என் புருஷன், சட்டிப்பானை களை எல்லாம் புள்ளைங்க மேலே வீசி எறிந்து உடைச்சு, புள்ளைக்கு முன் பல்லே போயிடுச் சுங்க,’’