பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36

அவள் கூறுவதை ஆமோதிப்பது போல் வேறொருவள், 'ஆமாமுங்க. 'இம்’ன்னு நாங்க ஒரு வார்த்தை ஆரம்பிக்கிறதுக்குள்ளேயே, சிப்பாய் மாதிரிப் பாஞ்சிண்டு வந்து டுவாங்களே’’ என்றாள்.

பலவேசம்பிள்ளை, 'அதுக் குத்தான் அமைதியா, மனப்பூர்வமான எண்ணத் தோடு, விடாமெ போராடணும்னு சொல்றேன்.’’ என்றார்.

போராட்டத்திலே தானுங்களே எங்களுக்கு நிதக்கும் பொழுதே விடியுது. ரவெக்கால்லாம் இருக்கிற காசைக் கொட்டி, குடிச்சிட்டு வந்து ஆட றாங்க. விடிஞ்சா வவுத்தைப் பசிக்குது. அத்தக் கொண்டா, இத்தக் கொண்டா, இடியாப்பத்தைக் கொண்டான் னு கத்தி ரகளை பண்றாங்க. பச்சப் புள்ளைங்க தேவலாம் போல இருக்கு. சட்டியிலே இருந்தாத் தானே - ஆப்பையிலே வரும். இதைச் சொன்னா சண்டைதான்*

நீங்க சொல்றது உண்மைதான்; நான் ஒத்துக்கறேன். அதனாலேதான் நான் இப்போ ஒரு புது முயற்சிக்கி உங்க ஒத்துழைப்பை எதிர் பார்க்கறேன். வியாதி வந்த பிறகு வைத்தியம் செய்யறதைவிட, நோயேவராமல் தடுத்துடறது நல்லது இல்லியா’’ என்று கேட்டார் பலவேசம் பிள்ளை.

நீங்க என்ன சொல்றீங்கன் னு எங்களுக்குப் புரியலியே எஜமான்’’ என்று எதிரே இருந்தவர்