51
51
நாங்க ஆம்பிளை சிங்கம். அப்படித்தான்
அடிப்போம்; உதைப்போம். பொட்டைங்க, மதுக்கடை முன்னாலே வந்து கலாட்டாப் பண்ண lங்களா??? என்றான் பொன்னியின் புருஷன்.
'நாங்க கலாட்டாப் பண்ணவும் இங்கே வல்லே; உங்க கையாலே உதை தின்னவும், ஆயி, அப்பன் எங்களைப் பெத்து வளர்த்து உன் கையிலே குடுக்கல்லே. பிள்ளை குட்டிகளை
நெனச்சுப் பார்த்தாவது எங்க பின்னாலே வாங்க..??
“ ‘பிள்ளையாவது... குட்டியாவது... போடீ.
மரம் வெச்சவன் தண்ணி ஊத்துவான்.’’
'மரம் வெச்சவன் நீதான் ஐயா. அதனாலே தான் உன்னைத் தண்ணி ஊத்தச் சொல்றேன். பாட்டிலைப் போட்டுட்டு வாங்கய்யா; உங்களை ரொம்பக் கெஞ் சிக் கேக்கறோம்.’’
இதற்குள்
மா.சாமி, அந்தப் பெண்கள் கூடத்தில் தன் மனைவி மூக்காயியும் இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியோடு அவள் அருகில் போய் நின்று கொண்டு, வாய்குழற, என்ற சாத்தியே! இம்மாந் நேரம் உன்னை தான் கவனிக்கவே இல்லியே. எத்தினி வாட்டி கூப்பிட்டிருக்கேன்; இங்கே வரவே மாட்டியே. இந்தா மூக்காயி, ஒரே ஒரு