இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
77
77
தண்ணி ஊத்தப் போறே. மஜாவா-பழசை யெல்லாம் மறந்து, ஆனந்தமாக் குடிக்க ணும். நாங்க ஐந்து பேரும் ரவக்கி இங்கே உனக் காகக் காத்துக்கிட்டு இருப்போம். ஏமாத்தி பிடாதே; சொல்லிலிபிட்டேன்,’ என்று கெஞ்சாக் குறையாகக் கூறினான் ஆறுமுகம்.
அதற்கு மேலும் ஏதும் பேச மனமின்றி, வழி நெடுக யோசனை செய்தபடியே ராமன் வீட்டை நோக்கி நடந்தான்.
- மனித சமுதாயத்தின் ஒவ்வொரு துறை
யையும் மதுக்கெடுகிறது.”
- -தி ரோசானாவ்ஸ்.
ஆறுமுகத்தைத் தவிர. மற்றவர்கள் எல்லாம் பகலில் வேலைக்குப்போய்விட்டு, இருட்டியதும், குறிப்பிட்டபடியே சவுக்குத்தோப்பிற்கு வந்துவிட் டனர். அங்கேயே பழிகிடக்கும் ஆறுமுகம், பகல் முழுவதும் பட்டினி. இரவும் வந்து; நண்பர்களும் வந்துவிடவே, அவனுடைய மனம் ஒவ்வொரு நிமிஷமும் ராமனுடைய வருகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தது.
இன்னும் ராமனைக் காணோமே; காசு போட்டு, சாராயம் வாங்கிவாடா?ன்னு சொன்ன