79
79
‘என்னாலியா? அப்படி நான் என்னடா பண்ணிப்பிட்டேன், ? என்றான் ஆறுமுகம் பையிலிருந்த பாட்டில்களை ஒவ்வொன்றாய் எடுத்து வெளியே வைத்தபடி.
"ஆமாம் அண்ணே. நேத்திப் பூரா உன்னை வீட்டுப் பக்கமே காணோம்னு பூவாயி தவியாயத் தவிச்சுப் போயி; பிள்ளையையும் தூக்கிக்கிட்டு என் வீட்டுக்கு வந்துட்டா..?
ஏனாம்??- - -
என் வீட்டிலே, நீ இருக்கியோன்னு வேவு
பார்த்துட்டுப் போகத்தான். என் பெண்சாதிக்கு ஒண்னும் தெரியாது; அது திருதிருன்னு முழிக் கிது. ஆனா...பூவாயிக்கு, உன் மொத்த விஷ யமும் எப்படியோ தெரிஞ்சு போச் சுது அண்ணே! என்றான் ராமன் வியப்போடு.
அதுக்கு என்ன செய்யனும்கறாளாம் அவ? என்றான் ஆறுமுகம் அலட்சியமாகப் பாட்டிலை எல்லோருக்கும் வினியோகித்தபடி.
"அவ ரொம்ப பயந்து சாகறா’ என்றான் ராமன். -
'எதுக்காம்! எங்கே அவளை கொன்று, தின் று போடுவேனோன்னா?”
அதில்லே. நீ எங்கேயாவது, போலிசுலே. கிலிசிலே மாட்டிக்கிட்டியோன்னுதான் மாற்சு போவுது’ - s -