பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

என்ருன் பிரபு. இப்படி வித்வான் பாடப் பாட, கஞ்சன், மோதிரம் கொடு...சங்கிலி எடுத்து வை. நூறு ரூபாய் கொடு என்று சொல்லிக் கொண் டிருந்தான்.

நேரம் ஆகிவிட்டது என உணர்ந்த பாடகன் தனது சங்கீத விருந்தை முடித்துக்கொண்டான். பிரபு உத்திரவிட்டபடி பரிசுப் பொருள்களும் பணமும் ஆந்து சேரும் என்று ஆசையோடு எதிர்பார்த்துக் காத்திருத் தான். ஆல்ை எதுவும் வரவில்லை.

ஐயா, எனக்கு விடை தருகிறீர்களா ?’ என்று பணிவுடன் கூறினன் பாடகன். w.

ஆகா, போய் வாரும்!’ என்று கும்பிடு போட்டான் பிரபு

பாகவதர் தயங்கி நின்றதைக் கண்டு, என்ன? ஏன் இன்னும் போகாமல் நிற்கிறீர்?’ என்று கஞ்சன் கேட்கவும், பணமும் பரிசும் வரவில்லையே என்ருன் பாடகன்.

பணமா ! பரிசா ? உமக்கா ஏனே ?’ என்று பிரபு ஆச்சரியப்பட்டான்.

நான் பாட்டுப் பாடியதில் மகிழ்ச்சி அடைந்து தாங்கள் பவுனும் சால்வையும் மோதிரமும் சங்கிலியும் ரூபாயும் கொண்டு தரும்படி உத்திரவிட்டீர்களே ? அவற்றை உங்கள் ஆள் எடுத்து வந்து தரவில்லையே...”

அற்புதமான நகைச்சுவையை உ ண ச் ந் து விட்டவன்போல், கடகடவெனச் சிரித்தான் கஞ்சப் பிரபு. பளாபனா 1 பவுனும் பட்டும் பிறவும் நான் உமக்குக் கொடுக்க வேண்டும் என்று நீர் எதிர்பார்ப்பது