பக்கம்:ரமண மகரிஷி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

ரமண மகரிஷி



அன்ன சத்திரம் கட்டி வாழ்ந்தவர்; போனவர்க்கெலாம் சோறு போட்டுப் புண்ணியம் தேடிக் கொண்ட அவனது தந்தை சுந்தரம் அய்யர் மகனுக்கு இங்கே பசிக்குப் புசி என்று ஒரு பிடி பிரசாதம் கொடுக்க யாருக்கும் இரக்க உணர்வு இல்லாமல் போய் விட்டது பார்த்தீர்களா? அந்த அன்னதாதாவின் மகன் கீழே விழுந்து விட்டதைக் கண்ட அங்கிருந்த சிலர்; அவனைத் தூக்கி மயக்கத்தைத் தெளிவித்து, அங்கும் பிரசாதம் தீர்ந்து விட்டதால், பாத்திரத்திலே இருந்த கடைசிப் பிடி சுண்டலை அவனுக்குக் கொடுத்தார்கள்.

அந்த ஒரு பிடி சுண்டலை அவன் மென்று தின்ற விட்டு, வயிறு முட்ட, தண்ணீரைக் குடித்தான்! வேறு என்ன செய்வான் பாவம்! அன்று இரவே வெங்கட்ராமன் அங்கே இருந்த திண்ணை ஒன்றிலே படுத்துக் கழித்தான்!

வயிற்றுக்குரிய ஆகாரம் இல்லாததால் தூக்கம் வரவில்லை அவனுக்கு! எழுந்தான் சிறுவன்! ஊரைப் பார்த்தான்! திருவண்ணாமலை இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கும் என்று அவ்வழியே போன ஒருவரைக் கேட்டான்.

இருபதுமைல் இருக்கும் என்ற அந்த வழிப்போக்கர் கூறியதைக் கேட்ட வெங்கட்ராமனுக்கு மீண்டும் கவலை அவன் மனதைப் புண்ணாக்கி விட்டது. எப்படி நடந்து போவது? உடல் முழுவதும் வலி எடுக்கிறதே. முட்டிக் கால்கள் நோகின்றனவே என்ற மன வருத்தத்துடன் யோசித்தான். ரயிலில் போனால் தான் போக முடியும். இனி ஓரடி கூட நடக்க முடியாதே நம்மால், என்றெல்லாம் எண்ணிய போது, அவன் காதிலே போட்டிருந்த கடுக்கன்களைப் பார்த்தான்!

கழற்றினான் வெங்கட்ராமன் கடுக்கன்களை! அவற்றை எடுத்துக் கொண்டு அருகே இருந்த ஒரு பிராமணர் வீட்டு வாயிற் படியிலே நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த வீட்டுக்காரர் வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/40&oldid=1280531" இலிருந்து மீள்விக்கப்பட்டது