பக்கம்:ரமண மகரிஷி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

95



மகரிஷி தனக்குரிய சித்துக்களால் எங்கே தன்னைத் தடுத்து நிறுத்தி விடுவாரோ என்று பயந்துபோன அந்த அமெரிக்கர், ஒன்றும் அவ்வாறு நடவாது என்ற நம்பிக்கை பெற்றார்.

அமெரிக்காவின் அமோக வியாபாரத்திலும், மற்றவற்றிலும் பெரும் புள்ளியாக உள்ள அவர் எப்படி மீண்டும் அமெரிக்கா திரும்பாமல் இருப்பார்.

அத்தகைய பணப்பற்றுடைய ஒரு வியாபாரி, எவ்வாறு ஆத்ம ஞானத்தை அடைய முடியும்?

பிராமண அன்பர் ஒருவர் வந்தார் மகரிஷியிடம் அருளாசி பெற. அவர் மகரிஷியைப் பார்த்து, ‘சுவாமி, அறியாமை மிக்க நாம் நிறைய படிக்கின்றோம். உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், நாம் அதிக அளவு படித்ததும் உண்மையானது விலகிக் கொண்டே போகிறது..’

‘மேல் நாட்டு வேதங்களையும் படித்தேன். அவை எதற்கும் உதவவில்லை. நம்முடைய மகான்கள் தங்களுக்குள்ளேயே மாறுபட்டு வேறுவேறு வழிகளைச் சொல்கின்றார்கள்.’

‘நான் பிரம்மம் நான் பிரம்மம்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இரு. நீ பிரம்மம் ஆகிவிடுவாய் என்று சங்கரர் கூறுகிறார். ஆன்மா ஒரு போதும் பிரம்மத்திடமிருந்து பிரிவதில்லை’ என்று மத்வாச்சாரியார் கூறுகிறார்.”

“நான் யார்? என்று கேட்டுக்கொள் என்று நீங்கள் சொல்கிறீர்கள், வேறு சில தீர்க்கதரிசிகள் வேறு விதமான வியாக்கியானங்களையும், வழிகளையும் கூறுகிறார்கள். என்னைப் போன்றோர் யார் கூறுவதை நம்பி நடப்பது சுவாமி” என்று கேட்டார்.

மகரிஷி ரமணர், இவன் பதில் கூறுவதற்குரியன் அல்லன் என்று எண்ணியோ - என்னவோ அவர் இதற்குரிய பதிலைக் கூறவே இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/97&oldid=1281356" இலிருந்து மீள்விக்கப்பட்டது