பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 99 ஸோமே : (தனக்குள் ஆகா! எவ்வளவு இலக்ஷணமாகவும் புத்தி நுட்பமாகவும் பேசுகிறாள். (வெளிப்படையாக அப்படியா மிகவும் சந்தோஷம் மாதவராயர் தன்னுடைய ஆசீர்வாதத்தை யும் பிரியத்தையும் உனக்குத் தெரிவிக்கச் சொன்னார். வஸ் : (வணங்கி) அவருடைய ஆக்ஞையை வண்ங்கிச் சிரசினால் ஏற்றுக் கொண்டேன். (வணங்குகின்றாள்) ஸோமே ; ஆனால்... வஸ் என்ன ஆனால்? GఐUGD ஒரு விசேஷம். வஸ் என்ன அது? ஸோமே : சொல்ல நாவெழவில்லை. வஸ் அதென்ன சங்கதி? என்னுடைய பிரபுவுக்கு ஏதாவது துன்பம் சம்பவித்ததா? சீக்கிரம் தெரிவித்தல் வேண்டும். ஸோமே : ஒன்றுமில்லை. நகை மூட்டை... வஸ நகை மூட்டைக்கு என்ன? திருட்டுப் போய்விட்டதா? ஸோமே ; இல்லை. எஜமானர் சூதாடி தோற்றுவிட்டார். வஸ (தனக்குள்) இதென்ன ஆச்சரியம்! நகை மூட்டைத் திருட்டுப் போயிருக்கச் சூதாட்டத்தில் தோற்று விட்டதாகத் தெரிவிக்கிறாரே அவர் பொய் சொல்வதும் ஒரு அழகாய்த் தானிருக்கிறது! அவர் சொல்லும் இந்தப் பொய்கூட நான் அவர் பேரில் கொண்ட மோகத்தை அதிகரிக்கச் செய்கிறது. ஸோமே நகைகளைப் பற்றி வருத்தப்படாதே காரியம் மிஞ்சிப் போய் விட்டது என்ன செய்கிறது! அவர் சூதாடுகிற வரல்ல என்னமோ பொல்லாத வேளை இப்படி ஆனது! இதோ இந்த வைர ஸரத்தை அவற்றிற்குப் பதிலாக ஏற்றுக்கொள். வஸ் (தனக்குள்) ஆகா இது இன்னமும் அதிக ஆச்சரியத்தை விளைவிக்கிறது! என்னிடத்தில் வந்து விட்ட நகைகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/101&oldid=887309" இலிருந்து மீள்விக்கப்பட்டது