பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நடுகல் நிறுத்துகின்ற நம்வழக்கே அதுவாகும்
சென்றவர் நம்மவர் என்பதற்குச் சான்றுகள்
ஒன்றிரண்டென்று ஒன்பது வரை
எண்ணுகின்ற கணக்கு முறையும்
ஞாயிறு முதலாக சனி ஈறாக
சொல்லுகின்ற கிழமை வரிசையும்
கோள்களைப்பற்றிய கொள்கையும்
சென்றவர்க்கும் நம்மவர்க்கும் இன்றுவரை ஒன்றே
அவர்களும் ஞாயிற்றை பகலவன் என்றே பகர்கின்ற
ஆய்வாளர் காணுகின்ற அடையாளங்கள்
தென்புலத்துப் பழம் பதிப்பென்பதே தெளிவு
மற்றபடி வடதுருவத்துக்கு ஓடித்திரிந்தவர்
மந்தை மேய்த்தார் மந்தையாகத் திரிந்தார்
மத்திய தரைப்பகுதியை வந்து வளைத்தார்
சரித்திரம் அவரையே ஆரியம் என்றது