பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிந்து வெளிப் புதையல்


ஊழியில் லெமூரியர் மூழ்கியப் பின்னே
வடக்கில் இமயம் எழுந்த தென்பார்
விந்தயத்துக்கு அப்பால் கடலும் திடலானது
சிந்தும் கங்கையும் செழுமை செய்தது
பெருவெள்ளத்துக்கு பிழைத்த ஒருகுழுவினர்
மேற்கில் நடந்து விந்தியம் கடந்து
சிந்து வெளியைச் சேர்ந்தார்
இழந்த லெமூரியத்தை ஈடுகட்ட
சென்ற இடத்தை செந்தமிழ் ஆக்கினர்
சீலம் சீனாப்ரவி பியாஸ் சட்லஜ்
யாற்றுப் படுகையில் ஒரு நூறு கோட்டைகள்
தென்புலத்து சிற்பத் திறனாக நிமிர்ந்தன
வடபுலத்தை வளர்த்த பண்பாடும் மேம்பாடும்
ஆவிபோல் தழைத்தது தெற்கில்
புகழ் கொண்டிருந்த தென் மதுரைக்கு நிகராக
வடக்கிலும் ஒரு மதுரை அமைத்துக் கொண்டார்
சிந்து வெளி பண்பாட்டின் இலக்கியமாக
சிந்து வெளியை செம்மைப் படுத்திய
செந்தமிழ்ப் பரம்பரை தனிவேறு குடிமுறையில்
துருவாச துருக்கிய யதுக்கள் அணுக்கள்
பத்த பலாயண பரத அவிநய
விசுவாமித்திர விஷணிய பூருக்கள் என

35