பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இசைக்கும் திறன்மிகு பெரும் புலவன்
வெள்ளி மலைக் கீழிருந்து விளரி பாடினான்
அழுத முகத்தோன் என்று ஆரியம் பழித்தது
அப்பரும் ஆதிசைவச் சுந்தரரும்
சீர்காழிப்பிள்ளை சிவஞான சம்பந்தரும்
பாட்டுக்குப் பாட்டு பரவசப் பட்டு
பக்தியில் பெரிய னென்று முத்திரை வைத்தார்
இராவணனுக்கு ஈசுவரன் சிறப்புமுண்டு
இழிமகனானால் ஈசுவரத் தகுதி வாய்க்குமோ
கரிய நிறத்தவனை கார்வண்ணன் என்றாங்கு
இராவண்ணத்தவனை இராவணன் என்றார்
அவன் கொடிபறந்த கோட்டைகள் இருபத்தைந்து
அனுமப்படை அணைபோட்டுக் கடந்த கீழக்கரை
கடலோடையே சேதுக் கால்வாய்
அனுமன் கோயில் கொண்ட மணற்குன்று
மகேந்திர மென்ற பெயரில் இன்றுமுண்டு
ராமலிங்கத்தின் ஒருகோடி தனுக்கோடி
மறுகோடி மகேந்திரம் என்பார்
கோடிக் கரைக்கு கொஞ்சம் மேற்காக
கோரையாற்றின் மறுகரையிலுள்ள
ஜாம் பவானின் ஓடையும் சரித்திரச் சான்றே
இலங்கை கடலுன் மாய்ந்து போனதால்
சிலம்பை இசைத்த சேரத்து இளங்கோ

47