பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவனொரு தென்னவன் என்பதற்குச் சான்றே
மற்றும் ஒருப் பாட்டு மார்க்கண்டன் எழுத்து
மறலி இவனுக்காக உதைபட்டது கடவூரில்
கோயிலும் வழிபாடும் வரலாறும் விழாவும்
இன்றும் திருக்கடவூரில் நடைமுறையில் உண்டு
மார்க்காண்டன் நுதலிய பொருளும் நூற்பாவும்
தொன்மையிலும் தொன்மை
புராண நாயகரில் ஒருவனும் தமிழ்ப்புலவன்
என்பது கொண்டு இவன் பாட்டும் தலைச்சங்கமே
கௌதமனார் என்றதொரு பழந்தமிழ் வாணன்
பாரத தருமபுத்திரனை பாடினான் என்பர்
கௌதமன் என்றதும் இந்திரன் அகலிகை
நினைவுக்கு வருவார் நினைப்பதற்கு இல்லை
அவன் ராமன் காலத்து முனிவன்
இவர் பாரத காலத்துப் புலவர்
பாரதத்து மன்னவனை பாண்டியத்துப் புலவன்
பாடியது எவ்வாறு என்பார்க்குச் சொல்வேன்
மலையத்துவஜ பாண்டியன் மருமகனுக்காக
படைத்துணை கொண்டு சென்ற போது
உடன் சென்ற புலவன் கௌதமன்
போர்த் தலைவனான பாண்டவர் குலத்தலைவனை
பாட்டுடைத் தலைவனாய்க் கொண்டு பாடினான்
வடக்கின் இதிகாச காலம் தெற்கின்

65