பக்கம்:வரலாற்றுக் காப்பியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராம கதை எழுதிய வலிய புலவன்
வான்மீகியின் பேரால் புறப்பாட்டுண்டு
மறுபடியும் சீதை வனவாசம் வந்தபோது
வாழ்ந்திருந்த சிற்றூறே குசலவமேடு
கோயிலும் கோட்பாடும் அதனை வலியுறுத்தும்
சென்னை பெருநகருக்குப் புற நகராக
கூவத்துக் கரையில் இன்றுமுண்டு
வால்மீகியின் பேரால் திருவான்மியூர் என
பேரூர் ஒன்றும் சென்னைப் புறநகரே
வால்மீகி வாழ்ந்ததும் வலியகாவியம் வரைந்ததும்
தென் புலத்திலிருந்து என்பதே தெளிவாகும்
அவன் புறப்பாட்டு வலியுறுத்துவது நிலையாமை
காஞ்சித் தினை என்பார் தலை சங்கமரமே
ஒரு தமிழ்க்கவி வேற்று மொழியில்
ராமகாவியம் எழுதினான் என்பதோ எனின்
ஒரு மேல்நாட்டுத் துறவி வீரமாமுனி
செந்தமிழ்த் தேம்பாவனி எழுதியபடிக்கே
ராமகாவியம் பால. அயோத்ய,
ஆரண்ய, கிஷ்கிந்த, சுந்தரயுத்தம்
என்று காண்டங்கள் ஆறு கொண்டது
அவற்றில் விந்தியத்துத் தெற்கில் நிகழ்ந்தனவே
ஆரண்ய கிஷ்கிந்த சுந்தர யுத்த காண்டங்கள்
கதையின் பெரும்பகுதி நிகழ்ந்த தென்புலத்தில்
வாழ்ந்தவன் வால்மீகி என்பதும்
புறநானூற்றில் அவன் பாட்டுண்டு என்பதும்

64