பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 பக்தி கொண்டோம் உன்னிடம் ஐக்கியமானோம். நீயே நாம், நாமே நீ. காப்பி இல்லையேல் நாம் இல்லை. காப்பி வெல்க. காப்பியே, என்றும் விளங்குக. என்றும் இன்பம் தருக. என்றும் வாழ்க. என்றும் வாழ அருள் புரிக. காப்பியே, அனைத்தையும் காப்பாயாக. உனக்கு நன்று. உன்னை உண்போம். உனக்கு உணவாவோம் அரிசியும் சாதமும் அவியலும் சாம்பாரும் யாருக்கு வேனும் நீ இருந்தால்! குடித்தால் இனிது. குடிக்கப்படுதலும் இனிது. நீ தியாகி. கன்று தருவதற்காக இனிய நீ அழிவுறுகிறாய். ஆயின் மறுமலர்ச்சி பெறுகிறாய்.