பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 - விவாகமானவர்களுக்கு - இந்த விதமாகக் கர்ப்பச் சிதைவு செய்து கொள்பவர் கள் க்ர்ப்பப்பையில் விஷமுண்டாகி எந்த சிகிச்சையாலும் நீக்க முடியாத மலட்டுத் தன்மையையும் தேடிக்கொள்கிருர் கள். ஒரு குழந்தை உண்டானதும் இவ்விதம் அழித்து விட் டால், பிறகு குழந்தை வேண்டும் என்று விரும்பினுலும் அது கைகூடாமற் போய்விடுகிறது. ஆலுைம் சில பெண்களுக்கு வேண்டாத கர்ப்பம் உண் டானதும் அதை அழிக்க முடியாமல் போய்விடுகின்றது. அவர்கள் என்ன செய்வார்கள்? அந்தக் குழந்தையைக் கொன்றுவிடத் துணிந்து விடுகிருர்கள். இது நாள்தோறும் நடக்கும் சம்பவம், எல்லோரும் அறிந்ததாகும். இந்தச் சிசுக் கொலையால் ஏற்படும் கஷ்டங்கள்ைக் குறித்து இங்கே விபர மாக எழுத வேண்டிய அவசியமில்லை. - இப்படித் கர்ப்புச் சிதைவு செய்வதில் எத்தனையோ வித மான துன்பங்கள் ஏற்பட்டபோதிலும்,அவைகளைப்பெண்கள் விரும்பாத போதிலும், எல்லாத்தேசங்களிலும் ஏராளமான கர்ப்பச் சிதைவு வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவைகள் எல்லாம் ஆந்தரங்கமாகவே நட்ைபெறுவத்ால், அவைகளைப்பற்றியசரியான புள்ளிவிபரங்கள் கிடைப்பதில்லை. ஆனல் ஒவ்வொரு பெரிய ஊரிலும் அநேக விபசார விடு திகள் இருப்பதாலும், பால்யத்தில் விதவை ஆகிக் காதல் ன்பம் துய்க்க முடியாமல் கஷ்டப்படுவோர் ஏராளம்ாக ருப்பதாலும், கன்னிகளும், விதவைகளும் பெறும் குழந் தைகளுேச் சோரக் குழந்தைகள் என்று சமூகமும் சட்டமும் இழிவுசெய்வதாலும்ஆண்டுதோறும் நடக்கும் கர்ப்புச் சிதை. வுகள் லட்சக்கணக்காக இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆல்ை அதைத் தடுக்க நாம் செய்வதென்ன? அப்படிக் கர்ப்பச் சிதைவு செய்வது அறநூல்களுக்கு விரோதம். சிசு ஹத்தி, பாவம் என்று தர்ம சாஸ்திரம் ஒதுகின்ருேம். கர்ப் பச் சிதைவு செய்வோர் சட்டத்தின் ப்ொறியில் அகப் படுவதில்லை. ஏதேனும் சிலர் அகப்பட்டுக் கொண்டால் அவர்களை இழிவாகப் பேசிக் கடுமையாகத் தண்டிக்கிருேம். கர்ப்பம் உண்டாகி உயிர்க்கு ஆபத்து ஏற்படக்கூடியபெண்களி' டம் டாக்டர்கள் இனிமேல் கர்ப்பம் உண்டாகாதீர்கள் என கூறுவதோடு நின்று விடுகிருர்கள்; கர்ப்பம் உண்டாகாமல்