பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 175 என்ன செய்யலாம் என்பதையும் நன்ருக அறிந்துளர். அவர் களில் அநேகர் விந்து கர்ப்பப் பைக்குள் புகாமலிருப்பதற் காகப் பெண் குறிக்குள் விந்தை உறிஞ்சக்கூடிய வஸ்துக்களை வைத்துக்கொண்டு சம்போகம் செய்யும் பழக்க முடைய வர்களா யிருக்கிரு.ர்கள்’’ என்று கூறுகிரு.ர்கள். ஆதிகாலத்திலிருந்து கர்ப்பத்தடை முறைகள் சகல தேசங்களிலும் அறியப்பட்டிருந்தன என்பதில் சந்தேக மில்லை. அக்காலத்தில் அறிந்த முறைகளில் அநேகம் பிர யோஜன மற்றவையாகவும் விஞ்ஞான விரோதமாகவும் இருக்கலாம். ஆயினும் சில, நல்ல பிரயோஜனமுள்ள முறைகளாகவும், நாம் இக்காலத்றில் உபயோகிக்கும் முறைகளாகவும் உள. இந்தியா நமது தேசத்தில் சிறந்த காமநூலாகிய அநங்கரங்கம்! என்னும் சம்ஸ்கிருத நூல் 3 வருஷம்ான பழய சர்க்கரையில் ஒரு பலம் எடுத்து ஜலத்தில் கரைத்து 51 நாட்களுக்குக் குடிக்குமாறும், புளித்த் நீராகாரத்தில் "அக்னி' மரவே ரைக் கஷாயம் செய்து மூன்று நாட்களுக்குக் குடிக்கு மாறும் கூறுகிறது. - கி. பி. 14-வது நூற்ருண்டில் எழுந்த ரதி ரகஸ்யம்' என்னும் கொக்கோக நூல், உணர்ச்சி உன்னது ஸ்திதி அட்ையும் சமயத்தில் ஆண்குறியின் அடிப்புறத்தில் ஆடம் புடன் சேருமிடத்தில் அழுத்திக்கொண்டு, மினத்தை வேறு விஷயங்கள்ல் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறுகிறது: இந்த மாதிரி செய்தால் விந்து வெளியே வராமல் மூத்திரப் பைக்குச் சென்றுவிடும் என்றும், பிறகு ஆண்குறியை வெளியே எடுத்து மூத்திரம் பெய்தால் அத்துடன் வந்து விடும் என்றும் கூறுகிறது. அதே நூல் சில களிம்புகளையும் அஞ்சனங்களையும் உள்ளங்காலிலும் கொப்பூழிலும் தேய்த்தால் விந்துவரது என்றும் கூறுகிறது. வெளியேயுள்ள நரம்புகளை உத்வே கப்படுத்தி உள்ளேயுள்ள உறுப்புக்களைக் வேலை செய்யச்