பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Joj 0 - விவாகமானவர்களுக்கு _ தடைப்பட்டுப் போவதுண்டு. சிலருடைய ஆண்குறி கட்டியாக எழுந்து நிற்கவும் செய்யும், அவர்கள் சரிவர சம்போகம் செய்யக் கூடியவர்களாயும் இருப்பார்கள். ஆயினும் அவர்கள் சம்போகத்தில் அளவுகடந்து ஈடு பட்டவர்களாயிருந்தால் அவர்களுடைய விந்து சுக்கில உயிர்கள் இல்லாத விந்தாகவே இருக்கும். முதுமை அடைந்து ப்லவீனமாய் விட்டவர்களுடைய சுக்கில உயிர் களுக்குக் கரு உண்டாக்கும் சக்தி இராது. கோடிக்கணக்காக உண்டாகி வரும் சுக்கில உயிர் ஒவ்வொன்றும் ஒர் அங்குலந்தில் ஆயிரத்தில் ஒரு பாக அளவே இருக்கும். அவ்வளவு சின்னஞ் சிறியதாயிருப்பினும் ஆதில் தலை, கழுந்து, உடல் வால் என்று நான்கு பாகங்கள் தெளிவாகக் காண்ப்படுகின்றன. அவற்றுள் தலையே அதிக முக்கியமானது. அது ஒர் அங்குலத்தில் 5 ஆயிரம் பாகத்தில் ஒரு பாக நீளமே. அப்படி அனுப்போல் சிறியதான அந்தத் தலைதான் குழந்தையின் உட்ல், அறிவு, குணம் ஆகிய வற்றிற்கு ஆதாரமாகும். அதன் பின்னுள்ள உடல் முறுக் குடையதாயும் வளையாததாயு மிருக்கும். சுக்கில உயிர் பெண்குறி வழியே பிரயாணம் செய்வதற்கு உதவியா யிருப்பது அதன் வாலே யாகும். அதை அது ஆட்டிக் கொண்டு ஏழுநிமிஷத்தில் ஒரு இஞ்சுதுாரம் சென்றுவிடும். இவ்விதமான சுக்கில ചികി உடைய விந்து பீஜத் இல் உண்டாகி இருபது அடி நீளமுள்ள ஒரு குழாயில் வந்து நிறைகின்றது. ஆனல் அப்படி நிறைந்ததுமே அது வெளியே வந்து வழிந்துவிடுவதில்லை. விந்துப் பைகள் :-விந்தானது காதல் உண்ர்ச்சி கை மிகும் சமயங்களில்தான் வெளியாகும் அதுவரை, அது அந்தப் ಶ್ಗಅಟಲ್ಜೀತಿ இரண்டு அடி நீளமுள்ள வேறு ஒரு குழாயின் வழியாக மேலே ஏறி, மலக் குடலுக்கும் மூத்திரைப்பைக்கு மிடையேயுள்ள விந்துப் பையில் போய் சேகரமாகின்றது. இரண்டு பீஜங்கள் இருப்பதால் இடது பக்கமும் வலது பக்கமுமாக இரண்டு விந்து ஏறும் குழாய் களும் இரண்டு விந்து சேரும் பைகளும் உள. அந்தப் பைகளின் அருகே 'பிராஸ்டேட்' என்று கூறப்படும். இரண்டு கோளங்கள் இருக்கின்றன.