பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வீர சுதந்திரம் படுபவர்கள், பெற்ருே.ரிடம் சொல்லாமல் வந்தவர்கள் யாரேனும் இங்கு இருந்தால் தயவு செய்து போய் விடலாம். இப் போராட்டத்தில் எதுவும் கேரலாம். எல்லோரும் : எதற்கும் தயார் வந்தே மாதரம். ஒருவர் : அய்யா, இந்தத் தள்ளாத வயதில் தாங்கள் அதிக தூரம் நடந்துவர வேண்டாம் தங்களுக்கு ஒரு தனிச் சாரட்டு வண்டி ஏற்பாடு செய்திருக்கிருேம். அதில் தாங்கள் வரலாம். லஜபதிராய் : (கோபித்து) தம்பி, யாரிடம் என்ன பேசு கிருய் ஆயிரமாயிரம் இளம்பிள்ளைகளை முன்னே கடக்க விட்டுவிட்டு, பின்னலே கான் மட்டும் ரதத் தில் அமர்ந்து ஊர்வலம் போகப் பொம்மைத் தலைவ னல்ல கான். கானே முன்னின்று உங்களை வழி கடத்துவேன். இந்தக் கிழவன் உடலில் தானப்பா பலவீனம். இது வைரம் பாய்ந்த உள்ளம்:பார் வய தான இந்தக் கிழவன் எப்படி இயக்கத்தை கடத்து கிறேன் என்று பார். கட்டுப்பாடோடு என்னைப் பின் பற்றி வாருங்கள். வந்தே மாதரம். வந்தே மாதரம் (பல தொண்டர்கள் மாலை சூட்டி அவர் காலில் விழுந்து வணங்குகிருர்கள். லஜபதிராய் வந்தே மாதரம் என்று சொன்னதும் எல்லோரும் வந்தேமாதரம் என்று முழக்கமிடுகின்றனர் ஊர்வலம் புறப்பட்டு இரண்டு அடி நகர, ஒரு வெள்ளைப் போலீஸ் அதிகாரி, சாண்டர்ஸ் ஒர் உத்தரவை லஜபதியின் கையில் கொடுத்து) சாண்டர்ஸ் , 144 தடை உத்தரவு மீறில்ை...