பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வீர சுதந்திரம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, தொழில் பயிற்சி இல்லா மல் துங்கிவிட்டு கள்ளுண்டு மயங்கிய பின், மகாத் மாக்களுக்குச் சிலை வைப்பதும் அந்தச் சிலைகளே உடைப்பதும்தான் இந்தியரின் வேலையா” என்று உலகம் கேட்கிறது! பதில் சொல்லுங்கள்! நாம் எங்கே.போகிருேம்? (சோணுசலம் முதலியோர் நழுவப் பார்க்கிருர்கள். அவர்களைத் தடுத்து) கழுவாதீர்கள்! இந்தக் கேள்விக்குப் பதில் சொல் லாமல் எந்த மனிதனும் இனி தப்பி ஓடிவிட முடி யாது! கழுவாதீர்கள்: பதுங்காதீர்கள்! பதில் சொல் லுங்கள்! சபையிலே சொல்ல வெட்கமாயிருந்தால், யோசனை செய்து நாளே தனிமையிலாவது பதில் சொல்லுங்கள்! எப்படியும் பதில் சொல்லியே திர வேண்டும் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இந்தக் கேள்விக்கேற்ற பதிலை நீங்கள் சொல்லா விட்டால் இந்த நாட்டை மும்முறை எதிரிகளின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றிய, பாரதகாட்டின் இராணுவம், இந்தக் கேள்விக்குரிய பதிலை வெகு சீக் கிரம் சொல்லிவிடும். உம்! அதற்கு முன் நீங்கள் சொல்லுங்கள்! என்ன உங்கள் பதில்? எங்கே உங்கள் பதில்! (ஜன கணமன அதிநாயக ஜெயஹே’ பாடல் பளிச் சென்று கேட்கிறது. எல்லோரும் வணங்கி நிற் கின்றனர். .காட்சி-நாடகம் கிறைவுபெறுகிறது.