பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வெற்றி மேல் வெற்றி பெற...

வந்து, நீங்கள் நிறைவு பெறுவதை உற்றுப் பாருங்கள்:

நட்பமைதி அரசரின் வருகை மலை உச்சி எங்கிலும் அறிவிக்கப்படுகிறது.

துயருறறுத் தொல்லைபடுபவர்கள் பின்னர் மகிழ்வுறு கிறார்கள்;

மன வருந்தி அழுபவர்கள் மேலே பார்த்து களி கூரு வார்கள்;

அவர்களைக் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சங்கிலி கள் அறுக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்;

மாசுபடுத்தப்பட்டவர்கள் துப்புரவுவழி தூய்மையாக்கப் படுவார்கள.

களைப்படைந்து சோர்வுற்றவர்களும் பயணத்தினால் பாதிப்புக்கு உள்ளானவர்களும் ஆறுதல் அடைவார்கள்

நீர் வேட்கையால் தவிப்பவர்களே! வாருங்கள் வந்து பருகுங்கள்;

பசியால் துடிப்பவர்களே, வந்து வயிற்றை நிரப்புங்கள்! ஏனெனில், அழிவற்ற புனித நீர் காணப்படுகிறது, வாழ்வுக்கான உணவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உறங்குபவர்களே! எழுந்திருங்கள்! மாயத் தோறறங் களைக் கொண்ட கனவுகளைத் தட்டிக் கழியுங்கள்!

அழிவெனும் மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். தன்னலத்தின் ஆதிக்கத்திலுள்ள வீணான துரக்கம் இனிமேலில்லை!

ஏனெனில், கருணையின் தலைவன் வெளிப்பட் டுள ளான்,

நன்மையின் பொது அறமுறைக் கட்டளை விளக்கப்படு கிறது,