பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 145

அதனைப் பயிற்சி செய்து நடைமுறைப்படுத்துபவனே பேறு பெற்றவன்;

அதனுடன் ஒன்றாகிறவனே புனிதனாகிறான்.

அதனைத் தேடிச் சோர்வுற்று, நம்பிக்கை இழந் தவர்களே வாருங்கள்!

பணிவு எனும் புழுதியில் நெடுசாண்கிடையாக, நீங்களாகவே விழுங்கள்;

முற்றாகவே உங்கள் தன்னலத்தைப் போக்கிவிடுங்கள்.

தற்பெருமை கொள்ளக்கூடிய எல்லாவற்றையும் விட்டு விடுங்கள்;

ஆம்! எல்லாவற்றையும் துறந்து விடுங்கள்.

தாழ்மை எனும் நுகத்தை மாட்டிக் கொள்ளுங்கள்.

அப்போது அறக்கட்டளை பற்றிய அறிவிற்குள் நீங்களாகவே நுழைவீர்.

அதன்பின்னரே, நல்லவரின் அறக்கட்டளையின் மூன்று பெயர்களையும் நீங்கள் அறிவீர்கள்

முதலாவது-அறம்;

இரண்டாவது-நேர்மை;

மூன்றாவது-அன்பு.

தன்ன லத்தை விரும்பும் மாந்தர்கள், இந்த உயர்வான பெயர்களை ஏற்க மறுக்கின்றனர்.

அதனால் அந்த நால்வரின் அறக்கட்டளையைப் பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை.

இருளிலே நடமாடித் திரிவதனால், வஞ்சனை மிக்க இடங்களில் விழுந்து விடுகிறார்கள்.

அதனால், அச்சமும் ஐம்பமும், துன்பமும் துயர்படுதலும் அவர்களுடன் வாழ்கிறது.

உள்ளார்நத நேர்மையைக் கடைப்பிடியுங்கள்.