பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வெற்றி மேல் வெற்றி பெற.

ஒருவனின் உடலில் அழுக்குப் பிடித்ததும், அவள் அதனைக் கழுவித் தூய்மைப்படுத்துவதில்லையா?

அதேபோல்ஒருவனின் நெஞ்சம் அழுக்குப் பிடித்ததும், அவன் அழுக்கை அகற்றித் தூய்மையாக்குக.

தீயவினைகளைக் கழுவுதற்கு ஐந்து வகையான நீர்கள் உள்ளன:

தூய்மை-அது கவர்ச்சிகளையும், அவற்றிற்கு இடம் கொடுத்தலையும் கழுவி விடுகிறது.

இரக்கம்-அது தன்னலம் காடுவதையும் புறக்கணிப்ப தையும் கழுவி விடுகிறது.

பணிவு- அது எல்லா வெறுப்புகளையும் தற்பெருமை கொள்வதையும் கழுவி விடுகிறது.

மகிழ்ச்சி-எல்லாப் பேராசைகளையும் பொறாமைகளை யும் கழுவி விடும்.

அன்பு-எல்லா வெறுப்புகளையும் குறை கூறுதலையும் கழுவி விடுகிறது.

யாராக இருந்தாலும் வரட்டும், வந்து தூய்மையாகுக. அந்த நீர்கள அணியமாக உள்ளன.

போற்றுதற்கு உரியவன் எவனோ அவன் தீவினைகளி லிருந்து விடுதலை பெறுகின்றான்.

அவனுக்கு உயர்வுமிக்க நல்லறத்தின் கட்டளை தெரி கிறது, அத்னால் அவன் அதில் குடியிருக்கிறான்.

அவ்வாறாகவே, நல்லனவற்றின் அறக்கட்டளை விளக் கப்படுகிறது.

அப்படியே மாந்தர்களின் நெஞ்சங்களில் ஆழ்ந்தகன்று வாந்திருக்கிறது.