இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
த. கோவேந்தன் 31
செல்வத்திலும் வறுமையிலும் ஒரே நிலையாக இருப் பவன்;
வினை முடிவிலோ வினைகள் (செயல்கள்) கைக் கூடாத நிலையிலோ,
வாழ்விலோ தாழ்விலோ தன் எண்ணங்களை வாழ்வில் கொள்ளாதவன்;
என்றும் நிலைத்திருக்க விரும்பாதவன்;
ஆம்! அவனே எனது தூய்மையான நிலையைப் பெற்றவனாகிறான்.
அவனின் மகிழ்வின்பம் நிலைக்கிறது;
அவனுக்கு ஆறுதல் கிடைப்பது உறுதி;
அவனது அமைதி கெடுவதில்லை;
தூய்மை எதனால் ஆக்கப்பட்டது என்பதை அவன் அறிவான்;
உண்மையின் கறையற்ற தன்மையை அவன் புரிந்து கொள்கிறான்.
மாணவன் : உண்மையைத் துப்பரவு செய்வதுடன்
எனது உள்ளத்தையும் துபபரவு செய்வேன்;
நீர் தூய்மையாக இருப்பதைப்போல் நானும் தூய்மை யாகவே இருப்பேன்;
இன்ப எண்ணங்களை ஒழித்து விடுவேன்; அழியும் பொருள்களில் அவாக் கொள்ள மாட்டேன்;
எனலு தோற்றத்தைச் சிறப்பில்லாத ஒன்றாகவே கருதுவேன்;