30 வெற்றிமேல் வெற்றி பெற...
கெடுதலை உண்டாக்கும் இந்த நான்கிலிருந்தே மற்றெடுக்கின்றன எல்லாத் தீமைகளும் துன்பங்களும்.
உனது உள்ளத்தை நீயே கழுவிக் கொள்.
புலன்களினால் மட்டும் நுகரக் கூடியவற்றில் போவாக் கொள்ளுதலை அகற்றி விடு;
உரிமை பெறவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து மனத்தைப் பிரித்து விடு.
தன்னலத்திற்காக எதிர்ப்பதையும் தன்னலத்திற்கு சிறப்பு அளிப்பதையும் விட்டு விடு.
உனது தனிப்பட்ட, உரிமையானவற்றின் அழியா நிலைக்காக மிக்க ஆசை கொள்ளாதே.
அவ்வாறாக, எல்லா ஆசைகளையும் அழிக்கும்போது, போதுமென்ற மனநிலையை நீ பெறுவாய்.
அழிந்துபோகும் பொருள்களின் மேல் உள்ள ஆசையிலி ருந்து உனது மனத்தை விடுவித்ததும், நீ அறிவைப் பெறுவாய்;
தன்னல் எண்ணத்தை விட்டுவிடுவதனால் அமைதியை அடைவாய்;
முடிவில்லா வாழ்விற்கு அவாக்கொள்ளாதிருந்தால், சிதைத்துக் கெடுக்க முடியாததும்.அழிவுக்கு உன்னாகாதது மான உண்மையை நீ உணர்வாய்.
ஆசைகளிலிருந்து விடுபட்டவனே தூய்மை பெற். றவன்;
புலன் உணர்வுகளுக்கு அவாக் கொள்ளாதவன்;
அழிந்து போகும் பொருள்களில் மதிப்பு வைக்காதவன்;