82 வெற்றிமேல் வெற்றி பெற.
அது என்றும் நிலைக்க வேண்டும் என்ற பேரவாவை ஒழிப்பேன்.
எல்லா மனிதர்களுக்கும் சாக்காடு நேர்கிறது, அதனால் துயரக் கண்ணிர் வழிந்து ஒடுகிறது;
ஆனால், உண்மை என்றும் நிலையானது, அதன் அறிவு அமைதிக்கு வழி காட்டுகிறது.
தன்னலத்தைப் பின் தொடர்ந்தேன், அது நோக்காடு திரம்பியது;
உலகத்தைப் பின் தொடர்ந்தேன், ஆனால் அது பெரும் அளவு துயரத்தினால் நிரம்பி இருந்தது;
ஆனால் இப்போது உண்மையின் ஆசானே! உம்மையே நான் பின் தொடர்கின்றேன்;
மொழிகளில் கூற முடியாத பேரின் பத்தை அடைவ தற்கு என்னை நீர் அழைத்துச் செல்கின்றீர்;
தூய்மைக்கும் அமைதிக்குமான வழியில் காலடி வைப்ப தற்கு எனக்குத் திசையைக் காட்டிவிட்டீர்.
ஆசான் : முயற்சியில் தீவிரமாக இரு நீ எடுக்கும் முடிவுகளில் துணிவுடன் தில்; தாங்கிக் கொள்வதில் பொறுமையைக் கடைப்பிடி; அப்போது, நீ எல்லாப் பழிகளையும் வெற்றி கொள் வாய்,
அதனால் தூய்மை பெற்றவனாகி விடுவாய்; துன்பமும் தொல்லையும் ஒன்றாகவே குறைய. மகிழ்ச்சி, வலிமை, நிறை அமைதி இவற்றை நீ பெற்று விடுவாய்.