பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

255


 
தென்மொழி, தமிழ்நிலம் ஆசிரியர் தமிழ்நாட்டுப்
பிரிவினை உணர்வைத் தூண்டுகிறார்!
நடுவணரசின் கண்டனம்!


• அவரின் எழுத்துகள் வன்முறையைத் தூண்டுவனவாக இருக்கின்றன!

• அவர் எழுத்துகளை ஆராய்ந்த நடுவணரசின் உசாவல் குழு அவரைக் கடுமையாகக் கண்டிக்கிறது!

• அக்குழுவின் முடிவை, நடுவணரசின் செய்தித்தாள் கழகமும் ஏற்றுக்கொள்கிறதாக அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறது!

நடுவணரசின் செய்தித்தாள் கழகத்தின் (Press Council of India) சார்பில், தென்மொழி, தமிழ்நிலம் இதழ்களின் ஆசிரியர் பெருஞ்சித்திரனார் அவர்கள்மேல் சாட்டப்பட்டிருந்த குற்றச் சாட்டுகளை ஆய்வதற்காகக் கடந்த அக்தோபர் 28-ல் ஐதராபாத்தில் ஓர் ஆய்வுக் குழு அமைக்கப் பெற்றிருந்தது.

அக்குழு, தன் ஆய்வு அறிக்கையையும் இறுதியான தீர்ப்பு முடிவையும் அரசுக்குக் கொடுத்திருந்தது. அதனடிப்படையில் செய்தித்தாள் கழகம், நவம்பர் 10 ஆம் பக்கல் அத்தீர்ப்பு