336
வேண்டும் விடுதலை
அரசியல் தாக்குதல்கள் இருக்கும்வரை இந்திய
ஒருமைப்பாடு, ஒற்றுமை உணர்வுகள் வெற்றிபெறா!
பிரிவினை உணர்வும் வளர்ந்தே தீரும்!
இந்தியாவைப் பொறுத்த அளவில், வேறு எந்த நாட்டையும் விட, ஆளுகின்ற இனம், ஆளப்படுகின்ற இனங்களை விட மிகக் கொடுமையானதும், சூழ்ச்சி மிக்கதும், மக்கள் மேல் அன்பில்லாததும், மக்களை விலங்குகளுக்கும் கீழான தன்மையில் மதிப்பதும், பிறவியிலேயே வேறுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கற்பிப்பதும் ஆன ஓர் இனமாக இருப்பது, இங்குள்ள மக்கள் அனைவருமே என்றென்றைக்கும் கவலைப்படுகின்ற ஒரு செய்தியாக இருக்கிறது.
ஆம்! இங்குதான் ஆரியப் பார்ப்பனர்கள் அரசியலில் ஆளும் இனத்தவராகவும், பொருளியலில் கொழுத்த முதலாளிகளாகவும், குமுகாய அளவில் உயர்ந்த மேலாண்மை(மேலாதிக்கம்) உள்ள இனமாகவும், மத நிலையில் அதிகாரத் தலைமைப் பிரிவாகவும், சாதி நிலையில் தலைமைச் சாதிக் குலமாகவும் தங்களை மேலேற்றி நிறுத்திக் கொண்டு, இந்த நாட்டு மக்களை மிகக் கீழாகப் போட்டு, அவர்களை முன்னேற விடாமல் அழுத்தி மிதித்துக் கொண்டு உள்ளனர். இது வேண்டுமென்றோ, வெறுப்பாலோ, மிகைப் படுத்தியோ சொல்லப் பெறுவதன்று, முழு உண்மையாகக் கூறப்பெறுவது.