பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

349


 
விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும்,
தனித்தமிழ் நாடு கேட்பதும் தேசவிரோதமன்று!

பாவலரேறு அவர்களின் அறிக்கை!


மிழ் இனம் கடுமையான - மிகக் கொடுமையான ஒரு காலகட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழுக்காக, தமிழினத்திற்காக, தமிழ்நாட்டுக்காக உழைப்பவர்களெல்லாரும் ‘தீய சக்திகள்' என்றும், 'தேச விரோதிகள்'. என்றும் 'நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்' என்றும் குற்றஞ்சாட்டப் பெற்றுச் சிறைகளில் வைக்கப்பட்டு வருகிறார்கள். - அவர்கள். மேல் கறுப்புச் சட்டங்கள் பாய்ந்திருக்கின்றன.

அண்மையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், தமிழர்களின் அரசியல், பொருளியல், இனவியல், வாழ்வியல் உரிமைகளுக்காகப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களாகிய பெருமைக்குரிய மருத்துவர் - இராமதாசு, பண்ணுருட்டி இராமச்சந்திரன், பேராசிரியர் தீரன், தலித் எழில்மலை முதலியவர்களால் சென்னையில் கூட்டப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க 'தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில்', வெளிப்படுத்தப் பெற்ற ஞாயமான, உண்மையான கருத்துகளையும், கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் தாங்கிக் கொள்ள இயலாத பார்ப்பனிய முதலாளிய அரசு, அத்தலைவர்களின் மேலும், அம்மாநாட்டில் பேசிய தமிழ்த்