பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வேண்டும் விடுதலை

படிப்படியாக மாற்றித் தமிழில் அறிவியலையும் பிற துறைகளையும் கற்பிப்பது.

ஆங்கிலத்தில் திறமையுள்ள மாணவர்களும் மாணவர்கள் விரும்பினால் ஆங்கிலமொழியிலேயே கல்லூரிக் கல்வியைக் கற்பிப்பது, ஆங்கிலத்தில் திறமைக்குறைவான மாணவ மாணவிகள் மட்டும் அவர்கள் தாய் மொழியாகிய தமிழிலேயே கற்கலாம்.

இத்திட்டங்கள் தாம் தமிழக அரசின் பயிற்சிமொழித்திட்டம் இத்திட்டத்தில் எல்லாரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்வி என்பது ஒரு மொழியைக் கற்பது அன்று ? ஏதாவது தாய் மொழி வழியே உலக அறிவைப் பெறுவதே கல்வி. எனவே உலகத்திலுள்ள எல்லாத்துறை அறிவையும் தமிழ் மொழியாகிய தாய்மொழி வழியாகவே கற்பிக்க வேண்டித் தமிழ்மொழியில் அதற்குரிய கலைச் சொல்லாக்கம் நடைபெற்றுக் கல்லூரிக் கல்விக்கான பாடநூல்களை ஆக்கும் வேலையில் கவனம் செலுத்தப் பெற்று, இத்திட்டம் நன்றாகச் செயல்பட ஊக்கமளிக்கப் பெற்று வருகின்றது. ஆங்கில மொழியில் வழிவழியாகத் திறம்பெற்று வருபவர்கள் இராசாசி இனத்துப் பார்ப்பனர்களே என்பதாலும், அவர்கள் ஆங்கிலக் கல்வி கற்று எத்துறையிலும் நம் தமிழ் மாணவர்களை விஞ்சக்கூடும் என்று கண்டதாலும் , தமிழ்வழிக் கல்வி கற்கும் தமிழ் மாணவர்கள் வாழ்க்கை நிலையில் பின் தங்கிவிடக் கூடாதே என்பதற்காகத் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிக் கல்வி கற்றவர்களுக்கே, தமிழை ஆட்சி மொழியாகக்கொண்ட அரசினர் அலுவல் துறைகளில் முதலிடம் தருவது என்று அரசு முடிவு செய்தது. இதில் இராசாசி இனத்தார் கொதிப்படைவதிலேனும் கொஞ்சம் பொருளுண்டு. காமராசர் கொதிப்பதற்கு என்ன பொருள் என்று நமக்கு விளங்கவில்லை. ஆரியப் பார்ப்பனர்களே எல்லா மாநிலங்களிலும் எல்லா நாடுகளிலும் எல்லாத் துறைகளிலும் புகுந்து வாழ்நலன்களை நுகர்ந்து கொண்டு வருகையில், தமிழ்வழிக் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டில் கூட வாழ்வதற்கு வழி செய்யாத நிலை எப்படிச் சரியாகும்? இதைப் புரிந்து கொள்ளாத தமிழ்மாணவர் சிலரும், பார்ப்பன மாணவர்களுடனும் காமராசர் போன்ற காட்டிக் கொடுப்பான்களுடனும் சேர்ந்து கொண்டு தங்கள் எதிர்கால வாழ்க்கைக்கே வளங்கொடுக்கும் இத்திட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? பதற்ற மடைந்துள்ள மாணவர்கள் நன்கு எண்ணிப்பார்க்க வேண்டுகின்றோம்.