338
வைணவமும் தமிழும்
முறையில்) ‘உம்மைப்போல்' இருப்பான் என்று சொல்லி வைத்தார். பட்டரின் அளவுகோலில் அனந்தாழ்வான் உண்மையான இலட்சணத்தைப் பெற்றிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
(10) அம்மங்கி அம்மாளுக்கு உடையவர் அருளிச் செய்தவை: அம்மங்கிஅம்மாள் என்பவர் திருக்கண்ணபுரம் செல்ல விடைகொள்ளும்போது அருளிச் செய்தவை இந்த ஐந்து வார்த்தைகள்.
(i) அக்கினிச் சுவாலையை அணுகாதே; இங்குத் திருமாலை வெறுப்பவர்களான சிவனடிமார்களையும் மாயாவாதிகளையும் (அத்வைதிகள்) நெருப்பாகக் கருதி அவர்களை அணுகக் கூடாது என்பது.
(ii)அசுசியை மதியாதே: தேகாபிமானிகளாகிய சம்சாரக்கிலேசிகள்.இவர்களைக் கண்டால் கட்டையையும் ஒட்டையும் மதிப்பது போல் ஒரு துரும்பாக மதிக்க வேண்டும் என்பது
(iii) நஞ்சைத்தின்னாதே அன்னியப் பிரயோஜனர்கள் நஞ்சுக்கு ஒப்பானவர்கள் இவர்களிடம் பழகினால் சேதநன்கெடுவானாதலால் இவர்களை நஞ்செனக்கருதி’ அஞ்சவேண்டும் என்பது.
(iv)அபலைகளை அனுகாதே: ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் பயிற்சியின்றி விண் காலம் போக்கித்திரிபவர்கள் அபலைகளாவர். இவர்களைக் கண்டால் காமச்சுவை அறியாத கன்னியர்போல் எண்ணி வாளா இருக்கவேண்டும் என்பது.