பக்கம்:வைணமும் தமிழும்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக மேலும் சில

339



(v) ஆர்த்தரோடு கூடி அதுவர்த்தித்துவாராய் ஆர்த்தர் என்பவர் பூர்ணாதிகாரிகள் இவர்களைக் கண்டால் நிலா, தென்றல், சந்தனம், நீர், மலர்கள், தாம்பூலம்போல் உகந்து அவர்களின் திருவடிகளில் சம்பந்தம் பெற வேண்டும் என்பது. “நாம் சொத்து, நாராயணனே சொத்துக்கு உடையவன் அதை அவன் எப்படி வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும்” என்று மன அமைதியோடு இருப்பவர்கள் இவர்கள். இவர்கள் எப்போதும் திருமாலடியார்களிடம் அடிமைத் தொழில் செய்து அப் பரமசாத்வீகர்களின் அபிமானத்தில் ஒதுங்கி இருந்து வாழக் கடவதான மிக்க உயர்ந்த உறவைப் பெற்றிருப்பவர்கள். இவர்கள் வீடுபேறு அடைவது திண்ணம் என்பது சம்பிரதாயமாக நிலவிவரும் ஓர் உயர்ந்த உண்மையாகும்.