இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42
வைணவமும் தமிழும்
அடைவுபடுத்தி வெளியிட்டார். அங்ஙனம் அடைவுபடுத்திய தொகுதிகள் வருமாறு.
(1) இசைப்பாத் தொகுதிகள் :
(அ) முதலாயிரம் : இதில் அடங்கிய பிரபந்தங்களும் அவற்றிலடங்கிய பாசுரத் தொகையும்
பிரபந்தம் | பாசுரத் தொகை | |
---|---|---|
1. | பெரியாழ்வார் திருமொழி | 473 |
2. | திருப்பாவை | 30 |
3. | நாச்சியார் திருமொழி | 143 |
4. | பெருமாள் திருமொழி | 105 |
5. | திருச்சந்த விருத்தம் | 120 |
6. | திருமாலை | 45 |
7. | திருப்பள்ளி எழுச்சி | 10 |
8. | அமலனாதி பிரான் | 10 |
9. | கண்ணிநுண் சிறுத்தாம்பு | 11 |
ஆக பிரபந்தம் 9க்குப் பாசுரங்கள் | 947 |
இவற்றுள்1என்றுள்ளது பெரியாழ்வாராலும்; 2,3 எண்கள் உள்ளவை அவர் வளர்ப்பு மகள் ஆண்டாளாலும்; 4 எண் உள்ளது குலசேகராழ்வாராலும், 5 எண்ணுள்ளது திருமழிசைப் பிரானாலும்; 67 எண்ணுள்ளவை தொண்டரடிப்பொடிகளாலும் 8 எண்ணுள்ளது திருப்பாணாழ்வாராலும், 9 எண்ணுள்ளது மதுரகவிகளாலும் அருளிச் செய்யப் பெற்றவை.