பக்கம்:வைணமும் தமிழும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வைணவமும் தமிழும்



அடைவுபடுத்தி வெளியிட்டார். அங்ஙனம் அடைவுபடுத்திய தொகுதிகள் வருமாறு.

(1) இசைப்பாத் தொகுதிகள் :

(அ) முதலாயிரம் : இதில் அடங்கிய பிரபந்தங்களும் அவற்றிலடங்கிய பாசுரத் தொகையும்

பிரபந்தம் பாசுரத் தொகை
1. பெரியாழ்வார் திருமொழி 473
2. திருப்பாவை 30
3. நாச்சியார் திருமொழி 143
4. பெருமாள் திருமொழி 105
5. திருச்சந்த விருத்தம் 120
6. திருமாலை 45
7. திருப்பள்ளி எழுச்சி 10
8. அமலனாதி பிரான் 10
9. கண்ணிநுண் சிறுத்தாம்பு 11
ஆக பிரபந்தம் 9க்குப் பாசுரங்கள் 947

இவற்றுள்1என்றுள்ளது பெரியாழ்வாராலும்; 2,3 எண்கள் உள்ளவை அவர் வளர்ப்பு மகள் ஆண்டாளாலும்; 4 எண் உள்ளது குலசேகராழ்வாராலும், 5 எண்ணுள்ளது திருமழிசைப் பிரானாலும்; 67 எண்ணுள்ளவை தொண்டரடிப்பொடிகளாலும் 8 எண்ணுள்ளது திருப்பாணாழ்வாராலும், 9 எண்ணுள்ளது மதுரகவிகளாலும் அருளிச் செய்யப் பெற்றவை.