83
அத்தனை ஆணவக்காரிகளும் கடைசியில் இப்படித்தானே செத்தார்கள்!
"மூ...”
உதடுகள் உச்சரிக்கத் தொடங்கின.
விரல்கள் துப்பாக்கியின் விசையை அழுத்தத் தயாராக...
இன்னும் கண் இமைக்கும் நேரங்கூட இல்லை!
"டுமீல்!?"
ஒரு குண்டு வெடித்தால் போதும்!
தனக்கு நிகரில்லை என்று தலைநிமிர்ந்து வாழ்ந்த ரேவதி, தரையிலே விழுந்து கிடப்பாள், வேர் அறுந்த மரம் போல!
அவளை மலர்ந்த ரோஜாவாக மணம் வீசச் செய்து கொண்டு இருந்த சிவந்த இரத்தம், சீறிப்பாய்ந்து வெளியில் சிதறும்!
பஞ்சு மெத்தையில் படுத்துப் பழக்கப்பட்டவன் செஞ்சாந்து போன்ற இரத்தத்தில் மிதந்து கொண்டு இருப்பாள்.
நாள் முழுக்க துடிதுடிப்பாகச் சுழன்று கொண்டு இருந்த அவள் துடிப்பு அடங்கி, துள்ளல் ஒடுங்கி, துடுக்கு ஒய்ந்து, துரும்பு போல விழுந்து கிடப்பாள்.
ஆனால்,
கண் இனமக்கும் அந்தச் சின்னஞ்சிறு நேரத்துக்குள்-
கதவுகள் தட்டப்பட்ட ஒசை வானத்தைப் பிளந்தது!
"யாராம்?" ஓங்காரக் குரலெடுத்து ஓலமிட்டாள், ரேவதி.
மறு இமைப்பில் நிலைப்படியிலே எதிரொலித்த அந்தக் குரலைக் கேட்டதும், ஆ நீங்களா’ என்று மெய்மறந்து மகிழ்ச்சிப் பெருக்கில் கூவினாள்.