பக்கம்:அவள் ஒரு மோகனம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. வந்தார் மாப்பிள்ளை!


ரேவதிக்கு நெஞ்சுறுதி மட்டுமல்லாமல், உடல் உறுதியும் நிறையவே இருந்தது. அவள் கை எவ்வளவு வலுவாக அந்தத் துப்பாக்கியைப் பிடித்து இருக்கிறது!

அவளைப் பார்ப்பவர்கள் அவ்வளவு உறுதி படைத்தவளாக அவளைச் சொல்ல மாட்டார்கள். அவளுக்குக் கொடிபோன்ற உடல். பச்சை மூங்கில் போன்ற கைகள், வெண்டைக்காய் விரல்கள்.

வீணை மீட்ட வேண்டிய அந்த விரல்கள், எவ்வளவு வலுவாகத் துப்பாக்கியைப் பிடித்து இருக்கின்றன. இதைத்தான் குரங்குப் பிடி என்பதோ!

ஆனாலும், அவ்வளவு நெஞ்சு உரம் அதிகம்தான். இல்லாவிட்டால் இப்படித் துப்பாக்கியை எடுப்பாளா? அதை நெஞ்சுக்கு நேராக நீட்டிக் கொள்வாளா? அவளது செவ்விதழ்கள் "ஒன்று... இரண்டு..." என்று அர்ச்சனை பண்ணத்தான் செய்யுமா?

ஒன்றுதான் பாக்கி. "மூன்று...” என்று எண்ணி விட்டால் அவள் கதை முடிந்து விடும்!

தான் தான் அகம்பாவம் பிடிப்பவர்களின் இறுதிக் குரலே அதுதானே! அதிலும் ஆணவம் - அகங்காரம் பிடித்த பெண்களின் முடிவு இதுதான் என்று வரலாறு காட்டுகிறதே! அதிலும் அந்தக் காலத்து கிளியோபாட்ராவில் இருந்து, இந்தக் காலத்து மர்லின் மன்றோ வரை