பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்



துப்பாக்கி குண்டுகள் - இந்த அரை நிர்வாணப் பக்கிரியைத் துளைத்துவிடும். இது வெள்ளையனின் ஆதிக்க வெறி, நிறத் திமிர்ப்பேச்சு.

காந்திபிரான் இதயம் - கண்ணாடிப் பாறையல்ல, நான் - மரத்தின் வைரம் என்று கூறி, அவர் பிறரை ஏமாற்றவும் தயாராக இல்லை. வைரம் வீழ்ந்தால் பொடிப்பொடியாகி விடும் அல்லவா, அதனால்?

காந்தியடிகளின் நெஞ்சம், இயல்பாக வளர்ந்ததல்ல! மாற்றார் தாக்குதலைத் தாய்ப் பாலாகக் குடித்து வளர்ந்த சக்தி பெற்றது.

காந்தியடிகள், தாக்காமல் விடப்பட்டால், அவர் குழந்தை! தாக்கப்பட்டால், அந்த இதயம் வீரனின் வன்மையைப் பெறும்!

"என்னை ஏற்றுக் கொண்டவன் இருளில் நடப்பதில்லை. ஏனெனில், நானே சத்தியமும் - ஜீவனுமாய் இருக்கிறேன் என்றார் இயேசு.

இதிலே இருக்கின்ற 'என்னை' என்ற சொல்லின் பொருள் என்ன?

அந்த ‘என்னை என்பது, துப்பாக்கி... துந்துபி முழங்கத் துவங்குவதற்கு முன்னால், வெடிகுண்டு கண்டுபிடிப்பதற்கு முன்னால் - தொடங்கிய ஒன்று:

அதனை- இயேசுவும் தேடினார்-பெற்றார். காந்தியடிகளும் தேடினார் - பெற்றார். -

மனிதனால் கொடுத்துப் பெறாத சக்தியை, ஞானத் திரைக்கு அப்பால் கண்டெடுத்த காரணத்தால், வெள்ளையனின் பிடிவாதத்தைப் பள்ளத்தாக்கில் போட்டுப் புதைத்தார்- வார்தா முனிவர்!

அவரது தென்னாப்பிரிக்காவின் எரிமலை நிறப் புரட்சி, இந்தியாவிலே இருக்கிற எண்ணற்ற இதயங்களைத் தொடர ஆரம்பித்தது.

கருத்தவன் கர்த்தாவானான்:சிறுத்தவன் பெருத்தவனானான் காந்தியடிகளை அவன் தேடிக் கொண்டான்.

56