பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


நூற்றெட்டு முறை உச்சாடனம் செய்து முடித்தார்.

அடிகளாரைப் பார்த்து,"உமது பெயரை உச்சரித்த்தால் தான் எனது முடக்குவாதநோய் போயிற்று" என்று வந்தவர்.அவரிடம் விளக்கிக் கூறினார்.

"இறைவன்தான் உங்களுக்கு சுகம் தந்தார்! காந்தி இல்லை” என்று கூறிய காந்தியார், 'தயவு செய்து உங்களுடைய கழுத்திலே தொங்கும் எனது படத்தை அகற்றி விடுங்கள்' என்றார்.

காங்கிரஸ்காரர்கள், இன்று இந்தியாவின் மாநிலங்களிலே எல்லாம் காந்தியின் கொள்கைகளைக் காற்றிலே பறக்க விட்டு விட்டார்கள்.

ஆனால், கேவலம் ஓட்டு வேட்டைக்காக ஒரு மனிதப் புனிதனின் பெயரை கூறிக் கெடுத்து வாழ்கிறார்கள்.

தேர்தல் என்று ஒன்று இல்லையானால், காந்தியார் படத்தை அறவே கை விட்டு விட்டிருப்பார்கள்! அல்லது மறந்து விட்டிருப்பார்கள்! எல்லாம் காலம் காட்டும் கோலம்!

- The unknown
- "The Hindustan Times" 1.10.1998


இத்தகைய ஒரு வெள்ளுவாவை,அதாவது மனித இனப் பண்பின் முழு நிலாவை, வெள்ளையன் அரை நிர்வாணப் பக்கிரி என்றான்! அது மட்டுமா? அடிகளாரை சட்டத்தால் மிரட்டிச் சதிராடினான்!

காந்தியடிகளுக்கு சத்தியம்தான் தாய் தந்தை! - ஞானம்! உடன் பிறப்பு -அறம் கருணைதான் நண்பர்கள், சாந்திதான் மனைவி! பொறுமைதான் மக்கள்.

இந்த உறவுகளைப் பெற்ற ஒரு மனிதனை, புனிதனை, தூயனை, மக்கள் நேயனை, ஒழுக்கசீலனை, தொழுத கையுள்ளும் பகை ஒடுங்கும் என்ற ஒரு துப்பாக்கிதான் கொல்ல முடியுமே தவிர, ஆணவ, அகம்பாவ, அதிகார துப்பாக்கிகளால் கொல்ல முடியுமா?

அதனைத் தடுக்க அவரிடம் தான் 'அகிம்சை' என்ற கேடயம் இருக்கிறதே. ஆனாலும் ஆங்கிலேயன் சட்டங்களைக் காட்டி ஆர்ப்பரித்தான்

55