பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்



ஜோகன்ஸ் பர்க்கிலிருந்து அவர் டர்பன் நகர் சென்ற போது மார்டிஜ் பர்க் நகர் நிலையத்தின் ரயிலிலிருந்த காந்தியடிகள், வெள்ளையர்களால் வெளியே தூக்கி எறியப்பட்டார்.

'இந்த அவமானத்தை அப்போது எப்படி தாங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று ஒரு நிருபர் அவரைக் கேட்டார்.

எதையும் தாங்கும் இதயம் எனக்கு இல்லையென்றால், நான் அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என்று பதில் கூறிச் சிரித்தார் காந்தியடிகள்!

காந்தியடிகளார், அரசியல் துறைக்குக் கற்றுத் தந்த நாகரிகங்களிலே ஒன்று, என்ன தெரியுமா?

காந்தியடிகளின் கால்களை மக்கள் யாரும் தொட்டுக் கும்பிடக் கூடாது என்பது ஆகும்.

அதுபோலவே, காந்தியடிகளது படத்தை ஒரு மனிதன் கழுத்தில் அல்லது கரத்தில் அணிந்து கொள்வதை அவர் அறவே வெறுத்தார்!

வடலூர் வள்ளல் பெருமான் உயிருடன் உலா வந்தபோது, அவரது மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார், இராமலிங்க சுவாமிகளது திருவுருவத்தை மண்ணால் செய்து வந்து அவரிடம் காட்டினார் - சிலை அமைப்பைப் பற்றிக் கருத்துக் கேட்க !

வள்ளல் பெருமானுக்கு வாராது சினம்! அன்று என்னமோ குன்றேறி நின்றார்!

"வேலாயுதம், இந்த நாட்டிலே இருக்கும் சிலைகள் போதாஇோ, இதில் என்னையும் ஒரு சிலையாக்கி விட்டீரே" என்று சிவ்ந்த கண்களோடு அவரை நோக்கி, சிலையை வாங்கி கீழே போட்டு உடைத்தாராம்.

காந்தி பெருமானும் வள்ளல். பெருமானைப் போல, தனது படத்தை வணங்க, அது நினைவுச் சின்னமாக ஆவதை வெறுத்தார். இன்று, அவரது படம் கேவலம் ஒட்டு வேட்டை ஈனங்கட்கே பயன்படுகிறது - பாவம்!

கல்கத்தாவிலே இருந்து வந்த ஒருவர். காந்தியடிகளது படத்தைக் கழுத்திலே மாட்டிக் கொண்டு, அவரது பெயரை

54