பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


அதிலும், விவசாயம் - கலப்பையற்ற விவசாயம் என்றும் - கலப்பை விவசாயம் என்றும், ஆடு, மாடுகளுடன் விவசாயம் என்றும் பிரித்து வைக்கப்பட்டிருகின்றது.

மேற்கூறப்பட்ட மனித நாகரிக வளர்ச்சி, உலகின் எல்லாப் பகுதிகளிலும் நடந்து வந்திருக்கின்றன.

இருவகை வேட்டைச் சமுதாயங்களில் மனிதன் சிந்தித்துப் பகுத்தறிய வேண்டியதாக எதுவுமில்லை.

பெண்களும் - ஆண்களும் ஒரு வகையில் சரிசமமாக வாழ்ந்து வந்தார்கள் !குழந்தைகளைப் பெற்றுத் தரும் பெண்தான் - பெரியவள் என்ற கருத்தும் நிலவி இருக்கிறது.

அறிவு முதிர்ச்சியில்லா அக்கூட்டம், ஒரு பெண் கருவுற ஆண் தேவையில்லை என்றுதான் கருதியிருக்கிறது.

இந்த அடிப்படையில், கிரேக்க காலத்தில் யூரினோம் என்ற பெண் கடவுளானாள்! இதன்பின், கலப்பை விவசாயக் காலத்தில், ஆண்களின் பலம் உணரப்பட்டது.

பின்னர், பெண் கடவுள் இனம் பிரிக்க முடியாத ஆண்பால், பெண்பால் என்று இனம் பிரிக்க முடியாத யெகோவா ஆனது.

இங்கே ஒன்றை, விருப்பு வெறுப்பு இல்லாமல் கவனிக்க வேண்டும். ரிக் வேதத்தில் வருகின்ற சுலோககங்கள், பாபிலோனிய கிரேக்க படைப்புக் கவிதைகளை நினைவு கூர்கின்றன என்பதை, நாம் அறிய வேண்டியிருக்கின்றது.

கிரேக்கத்திலுள்ள மும்மைக் (Trinity) கொள்கையும் நமக்குத் தெரிந்ததே! எனவே, ரிக் வேதத்தில் வரும் மும்மைக் கொள்கை, அது ஏற்றுக்கொள்ளத் தக்கதோ - அல்லாததோ, அந்தச் சார்பு கொண்டிருப்பதில் வியப்பில்லை.

அதே நேரத்தில், ரிக் வேதக் கடவுள் கொள்கைக்குக் கிடைத்திருக்கின்ற பலத்த எதிர்ப்பை நாம் மறந்துவிடக் கூடாது.

வேதங்களின் ஆரண்யப் பகுதிகளாக விளங்கும் உபநிடதம், "பொருள் எப்போதும் பூரணமாக இருக்கும். ஆரம்பம் என்று ஒன்றுமில்லை” என்றெல்லாம் கூறியிருப்பதை நோக்க வேண்டும்.

ரிக் வேதக் கடவுள் கொள்கையை எதிர்க்கும் - இந்த வேதக்-

168