பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


என்னுடைய எழுத்துக்கள் தமிழ்த் துரோகிகளுக்கு வெடி குண்டுகள்.

எனவே, இந்தி ஆதிக்க வெறியர்கள் என்னிடம் ஆட்டிய வாலை சுருக்கி மடக்கிக் கொண்டனர்.

திருக்குறளை மேலோங்க வைக்க அந்த நாளில் பலர் தயங்கினர். பாசுரப் பக்திக்குப் பலியாகித் திணறினர்.

அதிகாரம் இருந்த காரணத்தால் சிலர் அடிமைத் தனத்தோடு ஆமையாகிக் கிடந்தனர்.

திருக்குறள் ஒரு நூலா? அதனைப் போற்றுவதா? உரிய நூல்களே போதும் - சீரிய தமிழ் வேண்டாம்.என்ற குறுகிய நோக்கத்தில் சிலர் போராட முன்வந்தார்கள்.

அவர்களின் குறுக்கெலும்பை நான் எனது கவிதைகளாலேயே உடைத்தேன்.

இப்போதாவது என்னை யார் என்று புரிகிறதா?

எனது இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.

என்னுடைய ஆசிரியர் பெயரைச் சேர்த்து பாரதிதாசனாகவே திகழ்ந்தேன்.

எனது தாய்மொழிக்கு என்னால் இயன்ற சேவைகளைக் கவிதைகளாலும் - நூல்களாலும் - ஆராய்ச்சிகளாலும் - செய்து போர் முழக்கமிட்டேன்.

என்னைப் பின்பற்றுகின்ற தமிழகத்து சிங்கங்களே, நீங்கள் என்ன செய்தீர்கள்?

நான் மறைந்ததற்குப் பிறகும் இந்திப் போராட்டம் நடைபெறுகிறதா? அதை என்னைப் போலவே எதிர்க்கிறீர்களா?

வாழ்க! வளம் பெறுக!

177