பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 159


புறுபவர்கள், துன்பம் வந்தபோது துவளுவது பொருந்தாது என்கிறான்.

இன்பம் வந்துறும் எனின் இனியதாய் இடைத்
துன்பம் வந்துறும் எனின் துறக்கல் ஆகுமோ? (28)

என்பது பாடல் பகுதி. இது, நன்மை வருங்கால் இன்பமாய் நுகர்பவர், தீமை வருங்கால் துன்புறுவது ஏன்? (இரண்டிற்கும் ஈடு கொடுக்கத்தானே வேண்டும்?) என்னும் கருத்துடைய

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லல் படுவ தெவன் (379)

என்னும் திருக்குறளின் மறு பதிப்புபோல் உள்ளதல்லவா?

தயரதன் மோட்சப் படலம்

என்பு இலா உயிர்

கணவன் இறந்ததை அறிந்த கோசலை, கோடைக் காலத்தில் வெயில் சுடுகின்ற வேளையில் வந்து அகப்பட்டுக் கொண்ட எலும்பு இல்லாத புழு- பூச்சி முதலிய உயிர்கள் வெந்து விடுவதைப்போல், தன் உடலும் உள்ளமும் வெப்பம் அடைந்தாளாம்.

அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி...
வெயில் சுடுகோடை தன்னில் என்பிலா உயிரின் வேவாள் (14)

என்பது பாடல் பகுதி. இது,

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் (77)

என்னும் திருக்குறளை நினைவுபடுத்துகிறது அன்றோ!

சித்திர கூடப் படலம்

இனிய சொல்

இராமன் சீதைக்குச் சித்திர கூடத்தின் சிறப்பைக் காண்பித்துக் கொண்டு செல்கிறான். துளைகள்