பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமத்துப்பால்
களவியல்-தகையணங்குறுத்தல்
அணி எவனோ

(தெளிவுரை) மான்பிணை போன்ற மருண்ட பார்வையும் நாணமும் இயற்கையில் இருக்கும்போது, இவளுக்கு அயலான அணிகலன்களை அணிந்தது ஏனோ?

"பிணையேர் மடநோக்கும். நாணு முடையாட்
கணி.எவனோ ஏதில தந்து"

(பதவுரை) பிணை = பெண்மானைப் போன்ற, மட நோக்கும்=மருண்ட பார்வையும், நானும் உண்டியாட்கு= நாணமும் இயற்கையாய் உடிைய இந்தப் பெண்ணுக்கு, ஏதில தந்து அணி எவனோ?=அயலான அணிகலன்களைக் கொண்டு வந்து அணிந்திருப்பது எதற்கோ? (ஏதில்= அயலானவை-ஏது இல-ஏதும்-எந்தத் தொடர்பும் இல்லாதவை; தந்து=கொண்டு வந்து தந்து: பிண்ை=பெண் மான், ஏர்தல்=போலுதல்-ஏர்-போன்ற மடம்:மருட்சி - மருண்ட தன்மை, மான்போன்ற மட நோக்கு என்றால், மருண்டு மருண்டு பார்க்கும் நோக்குத்தானே!)

(மணக்குடவர் உரை) பிணையை யொத்த மடப் பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துதற்கு இவைதாமே அமையும்.

(பரிமேலழகர் உரை) புறத்து மான் பிணை யொத்த மட நோக்கினையும் அகத்து நாணினையு முடையவளாய விவட்கு, ஒற்றுமையுடைய இவ்வணிகளே யமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்தணிதல் என்ன பயனுடைத்து? .