பக்கம்:அமிர்தம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தன் காரணமாகச் சிவந்திருந்தன, தொவ்வைப் பழம் மாதிரி. கன்னமும் ரத்தச் சிவப்பாய்விட்டது. தன் மனைவியின் பக்கம் பார்வையைத் திருப்பினான். அவள் விழிக்கோடியில் கண்ணிர் மிதந்து கொண்டிருந்தது. தற்செயலாக ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்த அந்த ஐரிகை கவுன் அவன் பார்வையில் பட்டது. அப்பொழுதுதான் அவளுக்கு சங்கதி புலனாயிற்று. ஒன்றுமே பேசாமல் விசும்பிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கித் தோளில் சாத்திய வண்ணம் தெருப்பக்கம் சென்று விட்டான் கந்தன்.

பூங்கொடி மனமொடிந்து இடிவிழுந்தவன்போல உட்கார்த்துவிட்டாள். பன்னெடு நாட்களாக வெகு பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தக் கவுன் திரும்பவும் தன் குழந்தையின் கையில் காணப்படுவதைக் கண்ணுற்றதும், அவள் பேதை மனத்திடை அவிந்து கிடந்த எண்ணச் சிதறல்கள் மீண்டும் புத்துயிர் பெற்றன. ஆனால் இந்த நினைவின் நிழல் ஒரு பாவமும் அறியாத பச்சைய பாலகனுக்கு எங்ஙனம் தெரியும்?

மடை திறந்ததுபோல் அவள் நயனச் செம்புகளினின் றும் கண்ணீர் மாலை மாலையாக வழிந்தோடியது. கண் இமைகளுக்கிடையே திசையாக விரிந்த நீர்ப் படலத்தில் புதைந்து கிடந்த நினைவுகள் புனர்ஜன்மமெடுத்தன.

ன்று மாலைப் பொழுது, அத்தி வானத்தில் விந்தைக் கோளங்கள் மலர்ந்திருந்தன. வேடிக்கை செய்துமுடித்த பிறகு கையில் தட்டை எந்தி கூட்டத்தை ஒரு தரம் வலம் வந்தான் அந்தக் கழைக்கூத்தாடி.

காலணா. அரையணா காசுகள் கவிழ்ந்து முத்தமிட்டன, நெளிந்து காணியிருந்த அவனது தட்டில். உவந்தளித்த அப்புண்ணியவான்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தான் கையிரண்டையும் ஒன்றுசேரக் குவித்தவண்ண்ம். திடுமென அவன் பார்வையில் ஏதோ மின்வெட்டிற்று. தட்டைப் பார்த்தான். இரண்டணா பணம் ஒன்று வந்த விழுந்-

5

65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/67&oldid=1313448" இலிருந்து மீள்விக்கப்பட்டது