46
பிரிந்தார் என்பதைப் பேசுகின்ற இளங்கோ
அரும்பெறல் ராமன் பிரிந்த அயோத்தி என்கிறார்
ஆக ராம கதை தமிழ்ப்பாடல்களிலுமுண்டு
தென்னாட்டு சிற்றூர்கள் பலவற்றின் சரித்திரத்தைத்
திடமுடனே ஆராய்ந்தால் தெரியவரும் பல உண்மை
வட குரங்கு ஆடுதுறையே வாலி வணங்கிய தலம்
திருப்பணந்தாள் தாடகை தவமிருந்தகோயில்
சடாயு புள்ளிருக்கும் வேளூரில் உயிர் நீத்தார்
மாரீசன் அடியுண்டது கொல்லுமாங்குடி
திரிசிரன் நிலைக்களம் திருச்சிராப்பள்ளி
ஆதித்த இருதயத்தை ராமனுக்குப் போதித்த
அகஸ்தியன் கோயில் கொண்டது அகஸ்தியாம் பள்ளி
பருத்தியூர் என்பதே பரத்துவாச ஆசிரமம்
ஊரையும் பேரையும் உரைத்துப் பார்த்தால்
தமிழ்நிலத்தில் ராம சரித்திரச் சுவடு தெரியும்
மொழி தோறும் ஊர்தோறும் ராமனைத் தமரென்பார்
தவறென்ன கண்டீர் எனக்குமுன் எழுதிய
அனைவரையும் மறக்கிலேன் வணக்கம் வணக்கம்
தாதன்
வாழிய கம்பரென்று வாழ்த்துரைத்து