பக்கம்:உயிரில் கலந்தது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:

பார்த்து"முடிவு கேட்கிறதுக்காக உள்ளே தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார்; இப்போது, இந்தப் பெண் பூஜைவேளைக் கரடியாக எங்கே வந்திருக்குது? ஆமா, யார் இந்தப் பெண்?...”

அம்மாவின் முகக்குறியீட்டு விளக்கங்களைத் துல்லியமாகப் படித்துக் கொண்டார் ஞானசீலன். வந்தவளுக்கு மரியானத. செய்ய வேண்டாமா? காப்பி கொண்டு வரும்படி வேண்டினர் . காப்பி வந்ததும், கோசலை போய்விட்டாள். போகும்பொழுது, “இவங்க பெரிய கதாசிரியை, எங்க பத்திரிகையிலே தொடர் கதை...அதாம்மா ரொம்ப வருஷம் வருற பெரிய கதை, எழுதப் போருங்க...அதுக்காகத் தான் வந்திருக்காங்க. தேடிப் போன மூலிகை காலிலே சிக்கினது போலத்தான் அம்மா இவங்க வந்திருக்கிறது. எங்க முதலாளி இவங்க கதையைப் போடுறதுக்கு எவ்வளவு தவம் இருக்கிறார்ன்னு உனக்கு எப்படி அம்மா புரியும்?...” என்று பூசிமெழுகிப் பேசி “பாவலா காட்டி அன்னையை உள்ளே அனுப்பிய மைந்தனின் போக்கை நம்பிளுள் அவள். -

நம்பிக்கை என்பது சீமை உரம்போல:

மனநோய்க்கு நம்பிக்கையும், பயிரின் சீக்குக்கு உரமும் கைகண்ட பலன் இல்லையா?

தவசீலி சிரித்தாள்.

ஞானசீலன் சிலிர்த்தார்.

“லார், என் கதையைப் போடப் போகிறீர்களா, ஸார்?” என்று கள்ளவிழிப் பார்வை விலக்கி, கன்னம் வழிச் சிரிப்பு உதிர்த்துக் கேள்வி கேட்டாள் அவள்.

p4

“ஆமாம், ஆமாம் - “எங்கே லார் என் கதையைப் போடப் போlங்க?... குப்பைக் கூடையிலா?...’ என்று பட்டு நறுக்கின மாதிரி கேட்டுவிட்டாள் அவள். இப்பொழுது அவளது சிந்தாரக் கன்னங்களிலே நகைப்பு இல்லை; மொழி பேசும் விழிகளிலே குறும்பு இல்லை; நாணம் ஊறிய உதடுகளிலே நமட்டுச்சிரிப்பு