பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


போராடிக் கொண்டிருக்கிறார்கள். செக்கு மாடு போல சுற்றி வந்து கொண்டிருக்கின்றார்கள் சிக்கலில் தாங்களே போய், மாட்டிக் கொண்டு;சுக்கல் நூறாகிப் போகின்றார்கள்.

நம்பிக்கை உடையவன் பைத்தியக்காரனல்ல. அவன் முதலில் தன்னை நம்புகிறான். தனது எதிர் காலத்தை நம்புகிறான். தனது சமுதாயத்தை, தனது நாட்டிற்கான தனது. கடமையையும் நம்புகிறான்.

ஏனெனில் நம்பிக்கை என்பது இதயத்திலிருந்து உருவாகும் இனிய ராகம். நம்பிக்கை என்பதை தைரியம் என்றே நாம் கூறலாம்.

நம்பிக்கை என்பது உருவாக்கும் சக்தி கொண்டதாகும். அதனால் தான் நம்பிக்கையை உள்ளமாகவும், செயலை உடலாகவும் பாவிக்க வேண்டும் என்று அறிவுடையோர்கள் கூறுவார்கள்.

ஆமாம்! நம்பிக்கை இல்லாமல் வாழ்வதும் உழைப்பதும், சிறகில்லாமல் பறக்க முயலும் பறவையைப் போன்றதாகும் .

ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கை கொண்டவனாகவே வாழ்கிறான். அதை விட்டால் வேறு வழியேயில்லை. வாழ்வும் இல்லை. இந்த உலகமே அவனது நம்பிக்கையின் இடமாகத் தான் விளங்குகிறது.

இப்படி வாழ்வோடு வாழ்வாக அரும்பி, முகிழ்த்து, மணம் பரப்பும் நம்பிக்கையை, செயல்படுத்தும் ஒத்திகை மன்றமாக, பயிற்சிக் களமாகவே விளையாட்டுக்கள் உதவுகின்றன.

நம்பிக்கை நல்ல வழிகாட்டும், நன்கு செயல்பட உரம் கூட்டும். திறம் சேர்க்கும். தைரியம் அளிக்கும் என்பதெல்லாம் உண்மை தான். விளையாட்டைப் பாருங்கள்.